கெங்கவல்லி, மார்ச் 15: கெங்கவல்லி அருகே புளியங்குச்சி ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது வெயில் காரணமாக தண்ணீர் வற்றி ஏரியில் செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளது. மர்ம நபர்கள் செடிகளுக்கு நேற்று தீ வைத்தனர். இது குறித்து பொதுமக்கள், கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் (பொ) செல்ல பாண்டியன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏரியில் தீ விபத்து
previous post