ஏரல், மே 10: ஏரலில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் மோர் வழங்கினார். இதில் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் விஜயகுமார், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், ஏரல் பேரூர் செயலாளர் அசோக்குமார், முன்னாள் செயலாளர் ஆத்திப்பழம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி ரத்னசபாபதி, நகர அவைத்தலைவர் அய்யாப்பிள்ளை, ஜெ.பேரவை செயலாளர் நவநீதன், வார்டு செயலாளர்கள் பெரியசாமி, சுந்தர், சதீஷ், ரமேஷ்,ராஜலிங்கம், கார்த்திகேயன்,அகஸ்டின், ஜெயமுருகன் மற்றும் நாகராஜன்,கந்தன்,பன்னீர் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏரலில் நீர்மோர் பந்தல் சண்முகநாதன் திறந்து வைத்தார்
previous post