Wednesday, May 15, 2024
Home » ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து சென்ற ₹17.40 லட்சத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பொதுமக்கள் பாராட்டு அணைக்கட்டு அருகே விபத்தில் சிக்கிய வங்கி ஊழியரை மீட்டு

ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து சென்ற ₹17.40 லட்சத்தை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பொதுமக்கள் பாராட்டு அணைக்கட்டு அருகே விபத்தில் சிக்கிய வங்கி ஊழியரை மீட்டு

by Karthik Yash

அணைக்கட்டு, அக்.6: அணைக்கட்டு அருகே விபத்தில் சிக்கிய வங்கி ஊழியரை மீட்டு ஏடிஎம்மில் நிரப்புவதற்கு பையில் எடுத்து சென்ற ₹17.40 லட்சத்தை அந்த வாங்கி அதிகாரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினர். கே.வி. குப்பம் தாலுகா காலாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் சுரேஷ்(38). இவர் தனியார் வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பகல் ஒடுக்கத்தூர் பகுதியில் இயங்கும் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக அவருடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அணைக்கட்டு அடுத்த ஊனை வாணியம்பாடி கவுதமபுரம் அருகே காட்டுப்பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது திடீரென 3 காட்டுப்பன்றிகள் சாலையில் குறுக்கே வந்தது. பன்றிகள் மீது மோதியதில் பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்து சுரேஷிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ உதவியாளர் செல்வி, டிரைவர் பாண்டியன் ஆகியோர் ஆம்புலன்ஸ் உடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் இருந்த சுரேஷை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து சுரேஷின் உறவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவருடைய பையை பார்த்தபோது அதில் பணம் இருந்தது. அவரிடம் கேட்டபோது ஏடிஎம்மில் நிரப்புவதற்கு எடுத்துச்சென்றது தெரியவந்தது. பின்னர் அவர் பணியாற்றிய வங்கியின் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அணைக்கட்டு போலீசார் முன்னிலையில் சுரேஷின் பையில் வைத்திருந்த ₹17.40 லட்சத்தை அந்த நிறுவனத்தின் மேலாளர் ராஜேஷிடம் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் ஆகியோர் வழங்கினர். விபத்தில் சிக்கியவரை மீட்டதுடன் அவர் வைத்திருந்த பணத்தை அந்த வங்கியில் ஒப்படைத்த நேர்மையான செயலுக்கு ஆம்புலன்சின் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவரை பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டினர்.

You may also like

Leave a Comment

eleven + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi