மேலூர், அக். 31: மேலூர் அருகேயுள்ள புதுசுக்காமபட்டியை சேர்ந்த ரகு- சசிகலா தம்பதியரின் மகள் யோகிதா. இவர் மதுரை கருப்பாயூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சீனாவில் நடைபெற்ற 19வது ஏசியன் சாம்பியன்ஷிப் 2023 ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடி வெண்கல பதக்கம் வென்றார். பதக்கம் வென்று நேற்று ஊர் திரும்பிய யோகிதாவை மேலூர் பஸ் ஸ்டாண்டில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில், டாக்டர் லதா கணேசன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பகிரதன், கவுன்சிலர்கள் செல்வம், அருண்சுந்தர பிரபு, மனோகரன், மேலூர் எஸ்ஐ ஆனந்த ஜோதி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், புதுசுக்காம்பட்டி கிராமமக்கள், ஆட்டோ, டாக்ஸி ஸ்டாண்ட் டிரைவர்கள் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.