சங்கரன்கோவில்,ஜன.8: மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டையொட்டி சங்கரன்கோவில் மதீனாநகரில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் அஜீர் உசேன் தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் சேக் முகம்மது முன்னிலை வகித்தார். நகரத்தலைவர் அப்துல் நசிர் மாநாட்டு நினைவு கொடியினை ஏற்றி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் நூர் முகம்மது மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.