Tuesday, May 21, 2024
Home » எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்களை 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மீனவர்களை 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

by kannappan

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகுடன் 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பது மற்றும் தாக்குவது, கைது செய்வது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு விசைப்படகுடன் 3 மீனவர்களையும் மயிலிட்டி துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்புன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi