Monday, June 17, 2024
Home » எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது: அட்டுழியம் செய்யும் இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது: அட்டுழியம் செய்யும் இலங்கை கடற்படை

by kannappan

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைபிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது. இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 15 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi