டெல்லி: எல்லா மதமாற்றத்தையும் சட்டவிரோதம் என்று கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு தொடர்ந்த வழக்கில் இந்த கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத மாற்றத்தடை சட்டம் அமலில் உள்ள மத்திய பிரதேசத்தில் ஒருவர் மதம் மாற வேண்டுமெனில் 60 நாட்களுக்கு முன்பே மாநில அரசுக்கு தெரிவிக்கவேண்டும். ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்த அந்த மாநில உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தனிநபர் ஒருவர் தன்னுடைய மத நம்பிக்கையை தேர்வு செய்ய உரிமை உண்டு என்றும் கூறியிருந்தது. இந்த கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் எல்லா மதமாற்றமும் சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் சட்டப் பிரிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு மாநில அரசு 3 வாரங்களுக்குள் பத்தி வாரியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு, அடுத்த 21 நாள்களுக்குள் மனுதாரா்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்….