சேலம், மார்ச் 9: தமிழகத்தில் சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளஅதிகரித்துள்ளதால் எலுமிச்சை விளைச்சல் சரிந்து சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்துள்ளது. இதனால், கடந்த மாதம் ₹2 முதல் ₹4க்கு விற்ற பழம், தற்போது ₹6 முதல் ₹8 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
எலுமிச்சை பழம் ₹8க்கு விற்பனை
previous post