கீழக்கரை: தாதனேந்தல் ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரன். இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்று நட்டு குறுங்காடு உருவாக்கி, தோட்டக்கலை பூங்கா பராமரித்து வருகிறார். இத்தகைய சேவைகளை கவுரவித்து ஊராட்சிக்கு 9 விருது கிடைக்கப்பெற்றுள்ளது. தாதனேந்தல், பச்சேரி, பொக்காரனேந்தல், கைகொள்வார் மடம், முத்துவீரப்பன் வலசை கிராம மக்கள், ஊராட்சி தலைவரின் சேவையை மேலும் ஊக்விக்கும் விதமாக நாட்டியக்குதிரை பரிசளித்தனர் 100 நாள் வேலை திட்ட துாய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட ஊராட்சி பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆடவர், மகளிர் கபடி, மாரத்தான் போட்டிகளில் முதல் 2 இடம் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது டாக்டர் சையது சுல்தான் முஹமது தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. .