நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர் தம் விதவையர்களுக்கு இலவச முழு உடற்பரிசோதனை முகாம் வரும் 6ம்தேதி முதல் 10ம்தேதி வரை நடைபெற உள்ளது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் விதவையர்களுக்கு இலவச முழு உடற்பரிசோதனை முகாம் வரும் 6ம்தேதி முதல் 10ம்தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் விதவையர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.