ஊத்துக்கோட்டை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், மொத்தம் 10,463 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பேரூர் செயலாளர் குமரவேல், 4வது வார்டில் அவரது மனைவி பொதுக்குழு உறுப்பினர் அபிராமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும், வெங்கடேசன், திரிபுரசுந்தரி, கோகுலகிருஷ்ணன், செந்தாமரை ஆகிய 6 பேர் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாஜ சார்பில் உமாமகேஸ்வரி, லோகேஷ், உதயகுமார், லட்சுமணநாதன் ஆகிய 4 பேரும், பாமக 2, கம்யூ.1, பகுஜன் சமாஜ் 1, சுயேச்சை 3 என மொத்தம் 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்….
ஊத்துக்கோட்டை போரூராட்சியில் கணவன் – மனைவி உட்பட 17 பேர் வேட்பு மனு தாக்கல்
previous post