நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் ஒரு டீக்கடையில் வாங்கிய உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (48). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று மதியம் நிலக்கோட்டை நால்ரோடு பகுதிலுள்ள ஒரு டீக்கடையில் 5 உளுந்த வடை வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது குழந்தைகள் பிரித்து பார்த்தபோது ஒரு வடைக்குள் ரப்பர் பேண்ட் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தந்தை முனியாண்டியிடம் தெரிவித்துள்ளனர். கடைக்கு சென்ற முனியாண்டி, கடைக்காரரிடம் இதுபற்றிய கேட்டுள்ளார். இதற்கு கடைக்காரர் அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக முனியாண்டி நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்….