புதுக்கோட்டை: குடுமியான்மலை உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உயிரியல் காரணிகள் தயாரிக்கப்பட்டு குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளதாவது: குடுமியான்மலையில்,தமிழ்நாடு அரசு வேளாண்துறை மூலம் உயிரியல் கட்டுப்பாட்டுஆய்வகம் கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அன்னவாசல் வேளாண் இயக்குநர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பயிர்கள் சாகுபடியின் போது பயிரைத்தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு எண்ணற்ற இரசாயன பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.