உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை சாலையில் ஒரு இளம்பெண் கஞ்சா விற்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, மறைவான இடத்தில் ஒரு இளம்பெண், பையில் கஞ்சா வைத்து கொண்டு விற்று கொண்டிருந்தார். அவரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அதில் அவர், உத்திரமேரூர் அடுத்த வேடபாளையத்தை சேர்ந்த தமிழரசி (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்….