சீர்காழி, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா பள்ளி விளையாட்டு மைதானத்தில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீ தடுப்பு பற்றிய செயல்விளக்க நிகழ்ச்சி சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடைபெற்றது. நிலைய அலுவலர் ஜோதி மற்றும் தீயணைப்பு வீரர்கள், மாணவ, மாணவிகளிடம் வீடுகள், பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலையம், காவல்நிலையம் போன்ற அவசர தொலைபேசி எண்களை நினைவில் கொண்டு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.
பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பும் பொழுது தொலைபேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும், தண்ணீரில் மூழ்கியவருக்கு முதல் உதவி அளிப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மின்சார தீவிபத்துக்களில் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது, மின்சார இணைப்பை முதலில் துண்டிக்கவேண்டும். என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து பயனடைந்தனர். பள்ளி முதல்வர் ஆபிரகாம் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.