உத்தமபாளையம், ஆக. 8: ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி நிறுவனர் நினைவு தின பேரணி நடந்தது. 1956 ஆம் ஆண்டு ஹாஜி கருத்த ராவுத்தர் முகமது மீரான் அவர்களால், ஏழை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் துவங்கப்பட்டது. இந்த கல்லூரியின் நிறுவனர் ஹாஜி கருத்த ராவுத்தர் முகமது மீரான் 65 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் தர்வேஷ் முகைதீன், கல்லூரியின் ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரான், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரியின் முதல்வர் டாக்டர் முகமது மீரான், கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது. இதனையடுத்து நிறுவனரின் நினைவிடத்தில் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர்கள் பேராசிரியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.