ஜெயங்கொண்டம், மார்ச்9: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது பொறுப்பு தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழாசிரியர் இராமலிங்கம் வரவேற்றார், பள்ளியில் மூத்த பெண்ஆசிரியை லூர்து மேரிக்கு ஆசிரியர் பாவை .சங்கர் மகளிர் தினவாழ்த்துக்கூறி சிறப்பு செய்து ,பெண்களே நாட்டின் ஆளுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், மகளிர் தினம்பற்றி மாணவி தேவதர்ஷினியும் ,மகளிர் தின கவிதையை மாணவி பரணிகா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மஞ்சுளா, வனிதா, தமிழரசி, அருட்செல்வி சுரும்பார்குழலி அகிலா, கனிமொழி சத்யா, சங்கீதா இராஜசேகரன், அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.