Sunday, May 12, 2024
Home » உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்கள் கைது

உசிலம்பட்டி அருகே காரில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்கள் கைது

by Karthik Yash

உசிலம்பட்டி, மார்ச் 7: உசிலம்பட்டி அருகே, காரில் கஞ்சா கடத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி- தேனி சாலையில் உள்ள தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு தனிப்பிரிவு போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையினர். அதில் 14 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் (30) மற்றும் வீரபாண்டி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 14 கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்கள் ரூ.1580 மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

You may also like

Leave a Comment

sixteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi