திருப்புவனம், மார்ச்.31: திருப்புவனம் அருகே கொந்தகையை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த இந்துமதிக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக நேற்று வீட்டிற்குள் இந்துமதி தூக்கிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து கொந்தகை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பரிசோதனை செய்த டாகடர் இந்துமதி இறந்து விட்டதாக தெரிவித்தார். சிவகங்கை ஆர்.டி.ஓ விசாரணை செய்து வருகிறார்.
இளம்பெண் தற்கொலை
previous post