மதுரை, நவ. 18: சத்திரப்பட்டியை அடுத்த கடவூரைச் சேர்ந்தவர் சின்னக்காள் (23). இவர் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சின்னக்காள், கடந்த 13ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வீடு திரும்பாத அவரை, குடும்பத்தினர் தேடியபோது அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சத்திரப்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு. மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், சின்னக்காளின் உடலை வாங்க மறுத்து, 4 நாட்களாக அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். விசாரணையில், சின்னக்காளை தற்கொலைக்கு தூண்டியது அவரது உறவினர் செல்வம், அவரது மகன் பாக்கியம் (20) மற்றும் சின்னாள், மூக்கம்மாள், சங்கீதா, போஸ் ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மீது சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், பாக்கியம், மூக்கம்மாள் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.