Friday, May 17, 2024
Home » இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய மாமனார், மாமியார் உள்பட 5 பேர் கைது

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய மாமனார், மாமியார் உள்பட 5 பேர் கைது

by Ranjith

 

வேப்பூர், மே 22: விருத்தாசலம் கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (32). அதே பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா‌ (30). இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரின் காதலுக்கு ஜெகன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனா கல்பனாவை, திருமணம் செய்துகொள்ள ஜெகன் மறுத்தார். இதில் மனமுடைந்த கல்பனா கடந்தாண்டு எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கல்பனாவை, ஜெகன் காதலித்தது தெரிய வந்தது. அதன்பின், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோயிலில் இருவருக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், அன்று இரவே ஜெகன் தலைமறைவாகினார். இதனிடையே கல்பனா, ஜெகன் குடுபத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கணவரை கண்டுபிடித்து தருமாறு கல்பனா விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் திருமணமான முதல் நாளில் கணவர் தலைமறைவான விரக்தியில் இருந்த கல்பனா கடந்த மார்ச் 13ம் தேதி இரவு துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் விசாரித்து வந்தார். அதில், கல்பனாவை தற்கொலைக்கு துாண்டிய ஜெகன் தந்தை முருகன் (57), தாய் சாந்தி (47), வாசுகி(38), தங்கை கார்த்திகா, மைத்துனர் திலீப்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகனை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

20 − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi