விராலிமலை,டிச.25: இலுப்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இலுப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஒரு சில பெட்டிக்கடை, மளிகை கடைகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் அப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் ஞானபிரகாசம்(31) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.கந்தர்வகோட்டை அருகே இல்லம் தேடிக் கல்வி மையத்தில்மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி