ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஆலங்குடி, கோவிலூர், வம்பன், திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஆலங்குடி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.