காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணத்தில் அகில இந்திய புஷ்பாஞ்சலி சபரிமலை சேவை மற்றும் கிருஷ்ணகிரி புஷ்பாஞ்சலி சேவை, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து இலவச மருத்துவ முகாமை, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. வேப்பனஹள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அகில இந்திய மாநில தலைவர் புஷ்பாஞ்சலி புஷ்பா சீனிவாச கதிர் முகாமிற்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாளிகாபுர மேல் சாந்தி சம்போ நம்பூதிரி, சபரிமலை கீழ் சாந்தி ஸ்ரீகாந்த் நம்பூதிரி, டாக்டர்கள் பார்வதி, சபரி செல்வன், குரு சிந்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.