உடுமலை, ஜூலை 18: ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்றம், கருணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் உரல்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பியல், கண் மருத்துவம் ஆகியவற்றுக்கு ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனை இலவசமாக நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி டாக்டர் ஜிதின்ஜெரோடு முகாமை துவக்கி வைத்தார். உள்நோயாளிகளுக்கு சிகிச்சை, ரத்த பரிசோதனை, இசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே, உணவு, தங்குமிடம் இலவசமாக அளிக்கப்பட்டது. முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.