Sunday, June 2, 2024
Home » இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 9 படகுகளை அழிக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 9 படகுகளை அழிக்க உத்தரவு

by kannappan

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 9 விசைப்படகுகளை உடைப்பதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 18 விசைப்படகுகள் தலைமன்னார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 9 விசைப்படகுகள் கடலில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் சேதமடைந்து விட்டன. மீதமுள்ள 9 படகுகள் இயந்திரம் பழுதாகிவிட்டது. சேதமடைந்த 9 படகுகளை உடைத்து அழிப்பதற்கும், மற்ற படகுகளை ஏலம் விடவும் இலங்கை கடற்படை அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இலங்கை அரசுஅதிகாரிகள், முற்றிலும் சேதமடைந்த 9 விசைப்படகுகளை உடைத்து அழிக்க ஒப்புதல் தெரிவித்தனர். மேலும், மீதமுள்ள 9 படகுகளை ஏலம் விட இந்திய தூதரக அதிகாரிகள் விரும்பவில்லை. எனவே அவற்றை ஏலம் விட ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து நீதிபதி சிவக்குமார், சேதமடைந்த 9 விசைப்படகுகளை மட்டும் முழுமையாக உடைத்து அழிக்க இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்கினார். மீதமுள்ள 9 படகை ஏலம் விட தடை விதித்தார். …

You may also like

Leave a Comment

19 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi