கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததைத் தொடர்ந்து, போதிய எரிபொருள் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வாங்க இலங்கை மின்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்பு, இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், இந்தியா நேற்று 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கி உள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், `இலங்கையின் உண்மையான நட்பு நாடு இந்தியா. அர்ப்பணிப்பு கொண்ட கூட்டாளி நாடு. இந்திய தூதர் கோபால் பாக்லே, இந்திய ஆயில் நிறுவனம் அனுப்பிய 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்,’ என்று கூறப்பட்டுள்ளது….