கூடலூர், ஜூலை 19: கூடலூர் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் முத்துப்பாண்டி (34). இவர், கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் சிக்கன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்திருந்தவர்களுக்கு அனுமதியின்றி மது ஊற்றி கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும், வடக்கு காவல்நிலைய எஸ்ஐ பழனிவேல் தலைமையில் போலீசார் முத்துப்பாண்டி கடைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது, அந்த கடையில் முத்துப்பாண்டி அடையாளம் தெரியாத நபருக்கு மதுபானம் ஊற்றி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.