Sunday, June 16, 2024
Home » இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்: மக்கள் நெகிழ்ச்சி

இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்: மக்கள் நெகிழ்ச்சி

by kannappan

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலம்பட்டி ஊராட்சி முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(60). விவசாயி. இவர், கடந்த 19 நாட்களாக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் ஆபத்தான நிலையில் இருந்ததால் சண்முகத்தை, ஆம்புலன்சில் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். திடீரென அவர் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததால் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று கூடினர். சாலையில் குறுக்கே ஊர் வழக்கப்படி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து முரண்பட்டியில் உள்ள அவரது வீட்டின் திண்ணையில் சண்முகம் உடலை வைத்தனர். இதற்கிடையே சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்ரமணியன், துளசி மாலையை உடனே கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றியபோது அவர் திடீரென எழுந்து உட்கார்ந்தார். அவர் உயிர் பிழைத்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பானது. மேலும் துக்கம் விசாரிக்க வெளியூர்களில் இருந்து வந்த உறவினர்கள் சண்முகத்திடம் நலம் விசாரித்து விட்டு சென்றனர்….

You may also like

Leave a Comment

fifteen + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi