நாமக்கல், அக்.19: நாமக்கல் ஸ்ரீகோகுல்நாதா மிஷன் இயற்கை யோகா மருத்துவமனை மற்றும் இயற்கை மருத்துவ சுகாதார சங்கம் இணைந்து, சர்க்கரை வியாதிக்கான இலவச இயற்கை முகாமை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினர் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஸ்கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் மாதையன் மற்றும் செயலாளர் மாயாவதி குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மருத்துவமனை மருத்துவர்கள் விஜயலட்சுமி, சபிதா ஆகியோர் நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதியிலிருந்து இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்தும், சர்க்கரை நோய்க்குரிய ஆலோசனை முறைகள், தியான முறை, அவற்றின் முக்கியத்துவத்தை பற்றி நோயாளிகளுக்கு விளக்கினர். முகாமில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த வகை கண்டறிதல், மற்றும் எடை, உயரம் போன்றவை இலவசமாக பார்த்து தரப்பட்டது. இதில் ரெட்கிராஸ் தன்னார்வலர்கள், மாணவிகள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இயற்கை மருத்துவ முகாம்
previous post