சென்னை: கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் நடித்துள்ள படம், ‘ஆதார்’. ராம்நாத் பழனிகுமார் இயக்கியுள்ள படம் குறித்து கருணாஸ் கூறியதாவது: மனிதர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்துப் பேசும் சமூக நோக்கம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. கிராமத்தில் இருந்து கட்டிட வேலை செய்ய வரும் நானும், என் மனைவியும் இ்ங்கு எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்கிறோம். அதைப் பற்றிய கதையில், எனது மனைவியாக ரித்விகா நடித்துள்ளார்.சர்வதேச திரைப்பட விழாக்களில் 19 விருதுகள் பெற்றுள்ள இப்படம், வரும் 23ம் தேதி ரிலீசாகிறது. தற்போது நான் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். இனி வருடத்துக்கு நான்கைந்து படங்களில் நல்ல கேரக்டர்களில் நடிப்பேன். கதையின் நாயகன், காமெடி, குணச்சித்திர வேடம் என்று அனைத்து கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன். …