பெரம்பலூர்: இனாம்அகரம் ரேஷன் கடையில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தரமான பொருட்களை உரிய நாட்களில் பொது மக்களுக்கு தடையின்றி வழங்கிட விற்பனையாளரிடம் அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அருகேயுள்ள இனாம்அகரம் கூட்டுறவு ரேஷன் கடையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொது விநியோக திட்ட பொருட்கள் குறைபாடின்றி வழங்கப்படுகிறதா என பொருட்களை வாங்க காத்திருந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொது விநியோக திட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார். அதோடு பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்த்தார். மேலும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க காத்திருந்த பெண்களிடம், இந்த கடையில் பொருட்கள் குறிப்பிட்ட நாட்களில் குறைபாடு இன்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
இனாம்அகரம் ரேஷன் கடையில் ஆய்வு பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்
previous post