சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் 52 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. எனவே, அவர்களின் தகுதி குறித்த விவரங்களை அறிக்கையாக அனுப்ப ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: செயல் அலுவலர் நிலை-2ல் இருந்து நிலை-1க்கு பதவி உயர்வில் செல்ல தகுதியுள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் 2021-22ம் ஆண்டு 15ம் தேதி நிலவரப்படி வெளியிட வேண்டியுள்ளது. எனவே, செயல் அலுவலர்களின் நிலை-2ல் தகுதி குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி சென்னை-1 மண்டலத்தில் பணியாற்றும் செயல் அலுவலர் நிலை-2 மணிவண்ணன், வேலரசு, சென்னை-2 ஜெயபிரகாஷ் நாராயணன், காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல் அலுவலர் நிலை-2 சிவக்குமார், வெங்கடேசன், வெள்ளைச்சாமி, சென்னை ஆணையர் அலுவலகத்தில் செயல் அலுவலர் நிலை-2 தேன்மொழி, குமரேசன், நெல்லை மண்டலத்தில் செயல் அலுவலர் நிலை-2 சுரேஷ்குமார், ராஜேந்திரன், கடலூர் மண்டலத்தில் ராஜா சரவணக்குமார், நாகை மண்டலத்தில் செயல் அலுவலர் நிலை-2 தங்கபாண்டியன், பூமிநாதன், மதுரை மண்டலத்தில் செயல் அலுவலர் நிலை-2 ஜவஹர், நாராயணி, அங்கையற்கண்ணி, மகேந்திர பூபதி, பாலாஜி உட்பட 52 பேரின் தகுதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும். இதில், எவ்வித காலதாமமும் ஏற்றுக்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….