தஞ்சாவூர்: இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் புளியக்குடி வடக்குதோப்பு, புத்தூர், நடுப்பட்டி கிளை கூட்டம் மணிகண்டன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிளை செயலா ளர்கள் மகாலிங்கம், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காவிரிப்படுகை மாவட்டங்களில் இன்று கடையடைப்பு, ஒன்றிய அரசு அலுவலக முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம்
previous post