புதுடெல்லி: உலக அழகிக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 17 அழகிகள், நிகழ்ச்சி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான உலக அழகி இறுதிப் போட்டி, அமெரிக்காவுக்கு சொந்தமான போர்டோ ரிகோ தீவின் தலைநகர் சான் ஜுவானில் நேற்று முன்தினம் இரவு தொடங்க இருந்தது. ஆனால், இதில் பங்கேற்கும் இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 17 அழகிகள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அழகிகள், நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, 90 நாட்களுக்கு இந்த போட்டியும், ஒளிபரப்பும் ஒத்திவைக்கப்படுவதாக உலக அழகி போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது….