Sunday, June 16, 2024
Home » இந்திய அழகி உட்பட 17 பேருக்கு கொரோனா: இறுதிப் போட்டி ஒத்திவைப்பு

இந்திய அழகி உட்பட 17 பேருக்கு கொரோனா: இறுதிப் போட்டி ஒத்திவைப்பு

by kannappan

புதுடெல்லி: உலக அழகிக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 17 அழகிகள், நிகழ்ச்சி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான உலக அழகி இறுதிப் போட்டி, அமெரிக்காவுக்கு சொந்தமான போர்டோ ரிகோ தீவின் தலைநகர் சான் ஜுவானில் நேற்று முன்தினம் இரவு தொடங்க இருந்தது. ஆனால், இதில் பங்கேற்கும் இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 17 அழகிகள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அழகிகள், நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, 90 நாட்களுக்கு இந்த போட்டியும், ஒளிபரப்பும் ஒத்திவைக்கப்படுவதாக உலக அழகி போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது….

You may also like

Leave a Comment

one − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi