ரியாத்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியாவில் தனது முதல் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இந்த பயணத்தின்போது இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி வழங்கிய கடிதத்தை ஒப்படைத்தார். இந்நிலையில், சவுதி அரேபியாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வரும்படியும் அவருக்கு அழைப்பு விடுத்தார். கடைசியாக, கடந்த 2019ம் ஆண்டு இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்து சென்றார்….