கர்நாடகா: ஒன்றிணைந்த இந்திய நாட்டில் அவரவர் கலாச்சாரத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என கர்நாடகாவின் மாண்டியாவில் அல்லாஹு அக்பர் என முழங்கிய மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார். அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதாலேயே தான் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர், இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. இது ஒன்றிணைந்த நாடு என தெரிவித்தார். அவர்கள் அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றட்டும், நாங்கள் எங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம். எங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். நாங்கள் அவர்கள் பற்றி கேள்வி எழுப்பாத நிலையில், எங்களைப் பார்த்தும் கேள்வி எழுப்ப வேண்டாம் என கூறினார். அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதாலேயே நான் எனது முழக்கத்தை பதிவு செய்தேன். யார் மீதும் தவறு கிடையாது. எதற்காக பயப்பட வேண்டும். எனக்கு முன் எனது 4 நண்பர்கள் கல்லூரிக்குள் அழுதுகொண்டே சென்றனர். நீதிமன்றம் வேண்டாம் என்றால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு செய்தியாளர் கேள்விக்கு, முஸ்கான் அளித்த பதில்: இதை தவிர்க்க முடியாது. இது எங்களுக்கு முக்கியம். என்ன தீர்ப்பு எவ்வாறு வருகிறது என பார்ப்போம் என கூறினார். …