Monday, June 17, 2024
Home » இத்துனோண்டு மாஸ்க்குக்கு 200 ரூபாய் பைனா… கலெக்டர கூட்டிட்டு வாங்கய்யா… நானும் ரவுடி தான்…: போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பெண் அர்ச்சனை வீடியோ வைரல்

இத்துனோண்டு மாஸ்க்குக்கு 200 ரூபாய் பைனா… கலெக்டர கூட்டிட்டு வாங்கய்யா… நானும் ரவுடி தான்…: போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பெண் அர்ச்சனை வீடியோ வைரல்

by kannappan

தஞ்சை: தஞ்சையில் மாஸ்க் போடாமல் டூ வீலரில் வந்த பெண்ணுக்கு ரூ.200 அபராதம் விதித்ததால் போலீசாரை தகாத வார்த்தைகளால் பெண் திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாஸ்க் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வந்தனர். அப்போது ஒரு பெண், டூ வீலரில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் கேட்டனர். அபராதம் செலுத்த மறுத்த அந்த பெண், போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் அந்த பெண் பேசியதாவது:போலீஸ்காரர்: மாஸ்க் எங்கம்மா…பெண்: வண்டிக்குள்ள தான்ய்யா வச்சிருக்கிறேன்….. எனக்கு மூச்சு பிரச்னை இருக்கு அதான் போடல..போலீஸ்காரர்: சரி அபராதம் ரூ.200ஐ எடு..பெண்: இத்துனோண்டு மாஸ்க்குக்கு 200 ரூபாய் வாங்குறீங்களே? அசிங்கமா இல்ல..போலீஸ்காரர்: கலெக்டர் கிட்ட கேளுமா..பெண்: கலெக்டர கூட்டிட்டு வாங்கய்யா, அவன் கிட்ட கேட்கிறேன்… வீடியோ எடுக்கிறீயா.. எடு.. பேஸ்புக்கில் போடுறீயா போடு.. என்ன வேணா பண்ணிக்க… அரஸ்ட் பண்றீயா பண்ணு… நானும் ரவுடிதான்… உள்ள வந்து பார்த்துகிறேன்… என்ன ஒண்ணு பண்ண முடியாது… இவ்வாறு அவர் பேசுகிறார்.பெண் இப்படி பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதில் ஒரு போலீஸ்காரர், இது கலெக்டர் உத்தரவு என கூறினார். இதைக் கேட்டு இன்னும் கோபமடைந்த அந்த பெண், கலெக்டரை ஒருமையில் திட்டியதுடன் செல்போனில் படம் எடுத்த அந்த போலீஸ்காரரையும் திட்டி செல்போனை பறிக்க முயன்றார். இதில் ஏட்டு மாதவனின் கண்ணாடி உடைந்தது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இதுதொடர்பாக ஏட்டு மாதவன் கொடுத்த புகாரின்பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சை மானோஜிபட்டி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் சிராக்கி (27) என்பதும், அவர் ஒரு மனநோயாளி எனவும் தெரியவந்தது. சிராக்கியின் குடும்பத்தினர், மனநோயாளி என்பதற்கான சான்றுகளை போலீசாரிடம் காண்பித்தனர். இதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார்….

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi