ஆலங்குடி : ஆலங்குடி சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்க பனை நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர்பானங்கள் சத்துக்கள் என ஏராளமான குளிர்பானங்கள் இருந்த போதிலும் தற்போது பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியான நுங்கை விற்பனை வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு விற்பனை என்பது அமோகமாக நடைபெற்று வருகின்றது. பனைமரங்கள் போதிய அளவில் விளைச்சல் இல்லாததால் வியாபாரிகள் நுங்கு கிடைக்காமல் ஆலங்குடி அருகே உள்ள அறந்தாங்கி, ராயப்பட்டி, அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிலங்களில் உள்ள நுங்கு விலை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களிடம் ஒரு சுளை நுங்கை பத்து ரூபாய் விற்பனை செய்த போதும் அது தங்களது அன்றாட கூலிக்கு போதவில்லை என்றும், மேலும் பனைமரம் ஏற்று கூலி, பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளதால் நுங்குகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். மக்களின் உடல் சூட்டைத் தணிக்கப்பயன்படும் நுங்கை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மட்டும் முன்னேற முடியவில்லை என்று நுங்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனர்….
ஆலங்குடி பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் நுங்கு விற்பனை அமோகம்
previous post