புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் ரெட்டேரியில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார மையத்தை நேற்று காலை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, சுகாதார மையத்தில் செயல்பட்டு வரும் டயாலிஸிஸ் மையத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சுதர்சனம் எம்எல்ஏ, சுகாதார துணை ஆணையாளர் மணிஷ், வடக்கு மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன், மாதவரம் மண்டலம் செயற்பொறியாளர்கள் சுந்தரேசன், சின்னதுரை உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்….