Sunday, May 19, 2024
Home » ஆரணி அருகே உரிய ஆவணம் இல்லாமல்காரில் எடுத்து சென்ற ₹1.27 லட்சம் பறிமுதல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை

ஆரணி அருகே உரிய ஆவணம் இல்லாமல்காரில் எடுத்து சென்ற ₹1.27 லட்சம் பறிமுதல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை

by Mahaprabhu

ஆரணி, ஏப்.4: ஆரணி அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்து சென்ற ₹1.27 லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும், தேர்தலின்போது அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, ஆரணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆரணி அடுத்த சேவூர் எஸ்.எல்.எஸ்.மில் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு 3 வந்தவாசி கூட்டுறவு தணிக்கை அலுவலர் சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வேலூர்- ஆரணி செல்லும் சாலையில் ஆரணி நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, காரில் ₹1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரொக்கம் எடுத்து செல்வதும், சேத்துப்பட்டு போப் ஆண்டவர் தெருவை சேர்ந்த சங்கரன்(73), ஓய்வு பெற்ற விஏஓ என்பதும் தெரியவந்தது. மேலும், சங்கரன் தனது சொந்த வேலை காரணமாக பணத்தை எடுத்து செல்வதும் தெரியவந்தது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

twenty + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi