Sunday, May 19, 2024
Home » ஆந்திராவுடன் ரஞ்சி டிராபி முன்னிலை பெற தமிழகம் முனைப்பு

ஆந்திராவுடன் ரஞ்சி டிராபி முன்னிலை பெற தமிழகம் முனைப்பு

by kannappan

கோவை: ஆந்திர அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழகம் முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் முனைப்புடன் பேட் செய்து வருகிறது. எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆந்திரா முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்திருந்தது. அபிஷேக் 85, ரஷீத் 37, கேப்டன் ஹனுமா 21, ரிக்கி புயி 68 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.  ஷிண்டே 55 ரன், சசிகாந்த் 4 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் மேற்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேற, நிதிஷ் 1, பண்டாரு (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷோயிப் கான் 18 ரன் எடுத்தார். நேற்று காலை 10.1 ஓவரில் 20 ரன் மட்டுமே சேர்த்த ஆந்திரா 5 விக்கெட்டை பறிகொடுத்து, முதல் இன்னிங்சில் 297 ரன்னுக்கு அவுட்டானது (100.1 ஓவர்). தமிழக பந்துவீச்சில் கிஷோர், சந்தீப் தலா 3, விக்னேஷ் 2, அஜித், ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம், 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்துள்ளது (77 ஓவர்). சாய் சுதர்சன் 113 ரன், நாராயண் ஜெகதீசன் 35, அபராஜித் 88, கேப்டன் இந்திரஜித் 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் (7), விஜய் ஷங்கர் (0) களத்தில் உள்ளனர். 3வது நாளான இன்று, தமிழகம் முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற முயற்சிக்கும்….

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi