ஈரோடு,ஜூன்16: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் 29, பழங்குடியினர் நல விடுதிகள் 2 என மொத்தம் 31 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு,கொடுமுடி,மொடக்குறிச்சி, பவானி, அத்தாணி, சென்னம்பட்டி, ஆலாம்பாளையம், அந்தியூர், கவுந்தப்பாடி, தாளவாடி, பவானிசாகர், சத்தி, கோபி, நம்பியூர், குருமந்தூர், அறச்சலூர் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கான ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகளும்,ஈரோடு, கொடுமுடி, பவானி, சென்னம்பட்டி,ஆலாம்பாளையம், அந்தியூர், கவுந்தப்பாடி, தாளவாடி, சத்தி, கோபி, கெட்டிசெவியூர், நம்பியூர் ஆகிய பகுதிகளில் மாணவிகளுக்கான நலப் பள்ளி விடுதிகளும்,இருபாலருக்குமான கல்லூரி விடுதிகள் ஈரோட்டிலும், மாணவர்களுக்கான அரசு பழங்குடியினர் நல விடுதி அந்தியூரிலும், பெண்களுக்கான விடுதி சத்தியமங்கலத்திலும் செயல்பட்டு வருகின்றன.
இதில் சேருவதற்கு தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடமோ அல்லது ஈரோடு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.