ஈரோடு, மே20: ஈரோடு, சத்தி ரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 29ல் விரிவான பாடங்கள் நடத்தப்பட்டு, கலந்துரையாடல், வீடியோ படக்காட்சி, கேள்வி பதில் பகுதிகள் இடம் பெறும்.30ல் அருகே உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறியாடு பண்ணைக்கு பயிற்சி பெறுவோர் அழைத்துச் செல்லப்படுவர்.ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாய பண்ணையாளர்கள், மகளிர் குழுவினர் இதில் பயிற்சி பெறலாம்.மேலும் விவரங்களுக்கு 0424 2291482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆராய்ச்சி மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் யசோதா தெரிவித்துள்ளார்.