அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோடா மாகாணத்தில் சூறாவளி காற்றில் வானம் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது. தண்ணீர் நிறைந்து காணப்படும் மேகங்களில், நீல நிற ஒளி ஊடுருவும் போது இதுபோன்ற வான் நிகழ்வு ஏற்படும் என கூறப்படுகிறது. நீர் நிறைந்த மேகங்களுக்குள் ஊடுருவும் நீல வர்ண ஒளி, சூரியனின் சிவப்பு கதிர்வீச்சுடன் கலந்து வானம் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.