ஈரோடு, ஜூலை 11: ஈரோடு மாவட்டம், பெருந்துறை துடுப்பதி விஐபி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (54). திருப்பூர் பல்லக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி(44). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக உமா மகேஸ்வரி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டில் தனியாக இருந்த உமா மகேஸ்வரி, பாத்ரூம் சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உமா மகேஸ்வரியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.