Sunday, June 16, 2024
Home » ஆங்கில பாடத்தில் மாணவர்கள் அசத்தல்

ஆங்கில பாடத்தில் மாணவர்கள் அசத்தல்

by Neethimaan

விருதுநகர், மே 11: விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 24,315 பேரில் 24,237 பேர் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வெறும் 78 பேர் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் அதிகளவில் தோல்வியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் உள்ள 357 பள்ளிகளை சேர்ந்த 11,792 மாணவர்கள், 12,523 மாணவியர் என 24,315 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 10,998 மாணவர்கள், 12,146 மாணவியர் என 23,134 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 24,315 பேரில் தமிழ் பாடத்தில் 24,055 பேர் தேர்ச்சி, 260 பேர் தோல்வியடைந்துள்ளனர். ஆங்கிலத்தில் 24,237 பேர் தேர்ச்சி 78 பேர் தோல்வி, கணக்கு பாடத்தில் 23,881 பேர் தேர்ச்சி, 434 பேர் தோல்வியடைந்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 23,936 பேர் தேர்ச்சி, 379 பேர் தோல்வி, சமூக அறிவியல் பாடத்தில் 23,597 பேர் தேர்ச்சி, 718 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

10 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi