விருதுநகர், மே 23: பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, திருச்சுழி அருகே உள்ள கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இது தொடர்பாக திருச்சுழி அருகே உள்ள நெடுகனேந்தல் கிராம மக்கள், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: திருச்சுழி ஆதித்தனேந்தல் குரூப் நெடுகனேந்தல் கிராமத்தில். ஊர் மக்களின் பயன்பாட்டிற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கலெக்டர் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.