Sunday, June 16, 2024
Home » அரியலூரில் பாலின வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி

அரியலூரில் பாலின வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி

by Mahaprabhu

அரியலூர்,டிச.20: அரியலூரில் பாலின வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி நடைபெற்றது. அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதவி திட்ட அலுவலர்கள் கஸ்பர்ராஜா, ராஜ்குமார், வட்டார இயக்க மேலாளர் பரிமளா ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

பேரணியானது, பிரதான கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், புதுமைப் பெண் திட்டத்தைப் பரவலாக்குவோம் என்ன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு முழக்கமிட்டவாறுச் சென்றனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

15 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi